செய்திகள்
ஆசிரியருக்கு கொலை மிரட்டல்

நாங்குநேரி அருகே ஆசிரியருக்கு கொலை மிரட்டல்

Published On 2020-01-07 08:43 GMT   |   Update On 2020-01-07 08:43 GMT
நாங்குநேரி அருகே ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள தான்தோன்றியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 54). இவர் நெல்லை பழைய பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். சம்பவத்தன்று பாஸ்கர் மூலைக்கரைப்பட்டி பஜாருக்கு செல்வதற்காக தான் தோன்றி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த தெற்கு காரசேரியை சேர்ந்த மந்திரம் மகன் ஊய்காட்டான் பாஸ்கரிடம் ரூ.2000 கேட்டார். அதற்கு பாஸ்கர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஊய்காட்டான் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து அவர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஊய்காட்டானை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News