செய்திகள்
மின்சாரம் தாக்குதல் (கோப்புப்படம்)

திருபுவனையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம்

Published On 2020-01-04 10:53 GMT   |   Update On 2020-01-04 10:53 GMT
திருபுவனையில் தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
புதுச்சேரி:

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுகங்கோப் (வயது28). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெயதேவ் பவுரி (20) உள்ளிட்ட நண்பர்களுடன் திருபுவனை- சன்னியாசிகுப்பம் ரோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை குடியிருப்பில் தங்கி அங்கு வேலைபார்த்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று இவர்கள் தொழிற்சாலையில் மாடியில் நின்று வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக ஜெயதேவ் பவுரியை மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயதேவ் பவுரி படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார். உடனே ஜெயதேவ் பவுரியை அவரது நண்பர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருபுவனை போலீசார் விசாரணை நடத்தி பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்திய அந்த தொழிற்சாலையின் மானேஜர் சிவக்குமார், சூப்பர்வைசர் செல்வமணி ஆகிய 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News