செய்திகள்
நாங்குநேரி அருகே மது விற்ற 2 பேர் கைது
நாங்குநேரி அருகே மது விற்ற 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜி மற்றும் போலீசார் காரியாண்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவர்கள் அங்கு அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த விஜயநாராயணத்தை சேர்ந்த ராஜகோபாலை (வயது 52) கைது செய்தனர்.
இதுபோல மேல பண்டாரபுரத்தில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்த ராஜேஸ் (37) என்பவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரிடமிருந்து 12 மது பாட்டில்கள் மற்றும் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜி மற்றும் போலீசார் காரியாண்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவர்கள் அங்கு அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த விஜயநாராயணத்தை சேர்ந்த ராஜகோபாலை (வயது 52) கைது செய்தனர்.
இதுபோல மேல பண்டாரபுரத்தில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்த ராஜேஸ் (37) என்பவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரிடமிருந்து 12 மது பாட்டில்கள் மற்றும் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.