செய்திகள்
திசையன்விளையில் டீ கடைக்காரர் வீட்டில் திருட்டு
திசையன்விளையில் டீ கடைக்காரர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த டிவி, பட்டு சேலைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை-நவ்வலடி ரோடு காமராஜர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 45). இவர் மும்பையில் டீ கடை வைத்துள்ளார். நந்தகோபால் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.
கடந்த 31-ந்தேதி இவரது மனைவி சேர்மகனி வீட்டை பூட்டி விட்டு மும்பை சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த டிவி, பட்டு சேலைகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாத்திரங்கள் மற்றும் பட்டு சேலைகள் திருடு போயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.