செய்திகள்
தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள்- திருமாவளவன்
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தந்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தந்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தந்ததால் அதிமுகவினால் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை.
உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட பகுதிகளில் 50 சதவீத இடங்களை கைப்பற்றியுள்ளது என்று கூறியுள்ளார்.