செய்திகள்
ஓபிஎஸ், இபிஎஸ்

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி - இபிஎஸ், ஓபிஎஸ்

Published On 2020-01-03 12:50 GMT   |   Update On 2020-01-03 12:50 GMT
தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, குறுகிய காலத்தில் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். அ.தி.மு.க. அரசின் சாதனைக்கு மக்கள் அளித்த பரிசு இது என குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News