செய்திகள்
தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 6ந்தேதி திறக்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் வருகிற 6ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு முடிந்து 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இதற்கிடையே 4ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், பள்ளிகள் வருகிற 6ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.