செய்திகள்
விக்கிரமராஜா

சென்னையில் சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைந்தன- போலீஸ் கமி‌ஷனருக்கு விக்கிரமராஜா பாராட்டு

Published On 2020-01-03 12:13 GMT   |   Update On 2020-01-03 12:13 GMT
சென்னையில் சி.சி.டி.வி. கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறி இருந்தார். இதற்கு விக்கிரமராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னையில் சுமார் 2½ லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் 2017-2019-ம் ஆண்டு காலக்கட்டத்தில் குற்றங்கள் சரிபாதியாக குறைந்துள்ளதாக போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறி உள்ளார். இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு சார்பில் பெருமை கொள்வதாக அதன் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை மட்டும் அல்ல தமிழ்நாடு முழுவதும் வணிகர்களின் ஒத்துழைப்புடன் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு வருகிறது. காவல் துறையின் கட்டுக் கோப்பான சிறந்த சமுதாய பொறுப்புமிக்க நடவடிக்கைகளுக்கு பேரமைப்பு என்றும் துணை நிற்கும் என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News