செய்திகள்
நெல்லை கண்ணன்

நெல்லை கண்ணன் மீது புதிய புகார்

Published On 2020-01-03 02:51 GMT   |   Update On 2020-01-03 02:51 GMT
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பற்றி அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது அக்கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
சென்னை:

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில அலுவலக செயலாளர் வக்கீல் பாரதிதாசன் தலைமையில் நேற்று ஏராளமான கட்சியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில், ‘குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசும்போது, எங்கள் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பற்றி வேண்டும் என்றே அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு என்னை போன்ற தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. நெல்லை கண்ணன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News