செய்திகள்
கல்லூரி மாணவி கடத்தல் - வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்கு
ராஜாக்கமங்கலம் அருகே கல்லூரி மாணவி காரில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கண்ணக்குறிச்சி நடுவூரைச் சேர்ந்தவர் ராஜா (வயது57). இவரது மகள் ரமா(20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இதற்காக தினமும் அவர் தனது ஊரில் இருந்து அரசு பஸ் மூலம் கல்லூரிக்குச் சென்று வருவது வழக்கம்.
சம்பவத்தன்று கண்ணக்குறிச்சி நடுவூரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ரமா நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கார் வேகமாக வந்தது. காரில் இருந்தவர்கள் ரமாவை கடத்திக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் ராஜா அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரில் கல்லூரிக்குச் செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்த தனது மகளை மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த சஞ்சய், அவரது தந்தை நாகராஜன், தாயார் லெட்சுமி, கண்ணக்குறிச்சி நடுவூரைச் சேர்ந்த சரவணன் ஆகிய 4 பேர் காரில் கடத்தி சென்று விட்டதாகவும், தனது மகளை சஞ்சய்க்கு கட்டாய திருமணம் செய்து வைப்பதற்காக இந்த கடத்தல் நடந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது பற்றி ராஜாக்கமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் விசாரணை நடத்தினார். கல்லூரி மாணவியை கடத்தியதாக சஞ்சய் உள்பட 4 மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கண்ணக்குறிச்சி நடுவூரைச் சேர்ந்தவர் ராஜா (வயது57). இவரது மகள் ரமா(20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இதற்காக தினமும் அவர் தனது ஊரில் இருந்து அரசு பஸ் மூலம் கல்லூரிக்குச் சென்று வருவது வழக்கம்.
சம்பவத்தன்று கண்ணக்குறிச்சி நடுவூரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ரமா நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கார் வேகமாக வந்தது. காரில் இருந்தவர்கள் ரமாவை கடத்திக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் ராஜா அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரில் கல்லூரிக்குச் செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்த தனது மகளை மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த சஞ்சய், அவரது தந்தை நாகராஜன், தாயார் லெட்சுமி, கண்ணக்குறிச்சி நடுவூரைச் சேர்ந்த சரவணன் ஆகிய 4 பேர் காரில் கடத்தி சென்று விட்டதாகவும், தனது மகளை சஞ்சய்க்கு கட்டாய திருமணம் செய்து வைப்பதற்காக இந்த கடத்தல் நடந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது பற்றி ராஜாக்கமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் விசாரணை நடத்தினார். கல்லூரி மாணவியை கடத்தியதாக சஞ்சய் உள்பட 4 மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.