செய்திகள்
துக்ளக் பொன் விழா: வெங்கையா நாயுடு, ரஜினிகாந்த் பங்கேற்பு
துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழா வரும் 14 -ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதில் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுடன் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.
சென்னை:
துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழா வரும் 14 -ந்தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதில் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுடன் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.
துக்ளக் பொன்விழா மலரை வெங்கையா நாயுடு வெளியிட ரஜினி பெற்று வாழ்த்துரையாற்றுகிறார். இந்த விழாவில் கலந்து கொள்ளும் ரஜினிகாந்த் முதல் முறையாக துக்ளக் விழா மேடையில் பேச உள்ளார்.