செய்திகள்
போலீசார் விசாரணை

கோவையில் ஆபாச படம் பார்த்த 40 பேரிடம் விசாரணை

Published On 2019-12-31 06:47 GMT   |   Update On 2019-12-31 06:47 GMT
ஆபாச படம் விவகாரம் தொடர்பாக கோவையில் 40 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வலைதளங்களை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது, பகிர்வது குற்ற செயல் ஆகும். இந்த செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.மேலும் ஆபாச படங்களை பார்ப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் திருச்சியில் குழந்தைகள் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பரவ விட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பதிவிறக்கம் செய்பவர்கள், பதிவேற்றம் செய்பவர்கள் என 40 பேரின் ஐ.பி. முகவரியை கோவை மாவட்ட போலீசாரிடம் சென்னை போலீசார் வழங்கி உள்ளனர். இந்த ஐ.பி. முகவரியை வைத்து சம்பந்தப்பட்டவர்கள் யார்? என்பது குறித்து கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த ஐ.பி. முகவரிக்கு உட்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News