செய்திகள்
மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முடிகிறது

Published On 2019-12-30 02:51 GMT   |   Update On 2019-12-30 02:51 GMT
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முடிவடைகிறது. இது இயல்பான அளவை விட 2 சதவீதம் அதிகமாகும்.
சென்னை:

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட அதிக மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் நேற்று வரை இயல்பாக 444.1 மி.மீ. மழை பெய்ய வேண்டும்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் 452 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவை விட 2 சதவீதம் அதிகமாகும். இருந்தபோதிலும் சென்னையில் இயல்பான அளவை விட 19 சதவீதம் குறைவான மழையே பெய்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை காலத்தை பொறுத்தவரை டிசம்பர் 31-ந் தேதி வரை தான் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் வடகிழக்கு பருவமழை நாளை(செவ்வாய்கிழமை) முடிவடைகிறது. அதன் பின்னர் பெய்யும் மழை 2020-ம் ஆண்டு மழை அளவிலேயே கணக்கிடப்படும்.

Tags:    

Similar News