செய்திகள்
கைது

திருப்பூரில் ரூ.20 லட்சம் கேட்டு பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை- கணவர் கைது

Published On 2019-12-28 10:23 GMT   |   Update On 2019-12-28 10:23 GMT
திருப்பூரில் ரூ.20 லட்சம் கேட்டு காதல் திருமணம் செய்த பெண்ணை வரதட்சணை கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது24). பனியன் நிறுவன ஊழியர். இவரும் திருப்பூரை சேர்ந்த ஸ்ருதியும் (20) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஏப்ரல் 12-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு சுப்பிரமணியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் திருமணம் முடிந்து கணவன்-மனைவி இருவரும் ராக்கியாபாளையத்தில் குடியிருந்து வந்தனர்.

இந்தநிலையில் வரதட்சணை கேட்டு கணவன் மற்றும் மாமியார் சேர்ந்து ஸ்ருதியை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து ஸ்ருதி திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் திருமணம் முடிந்து நான் ஒருமாத கர்ப்பமாக இருந்தேன். அப்போது என்னிடம் லாவகமாக பேசி அந்த கர்ப்பத்தை சுப்பிரமணி கலைக்க செய்தார். இந்தநிலையில் என்னிடம் ரூ.20 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு எனது கணவரும், மாமியரான கவிதாவும் கொடுமைப்படுத்தியதுடன் கொலைமிரட்டல் விடுத்தனர் என்று தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்ற மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகவல்லி இதுகுறித்து சுப்பிரமணி, அவருடைய தாயார் கவிதா (47) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுப்பிரமணியை கைது செய்தனர்.
Tags:    

Similar News