செய்திகள்
கைது

தஞ்சாவூர் அருகே குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

Published On 2019-12-27 09:51 GMT   |   Update On 2019-12-27 09:51 GMT
தஞ்சாவூர் அருகே குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை வடக்கு ஆஜாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 38). சாராய வியாபாரி. இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதையடுத்து இவரின் குற்றசெயல்களை கட்டுபடுத்தும் நோக்கில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராவுக்கு, போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி ராஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News