செய்திகள்
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் பேரணி

Published On 2019-12-26 13:01 GMT   |   Update On 2019-12-26 13:01 GMT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூட்டணி கட்சிகளின் பேரணி இன்று நடைபெற்றது.
புதுச்சேரி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வன்முறை வெடித்தது.
 
வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றன. டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.

தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கடந்த 23-ம் தேதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் கூட்டணி கட்சிகள் பேரணி இன்று நடைபெற்றது.
Tags:    

Similar News