செய்திகள்
கொள்ளை

புதுவை ரெயின்போ நகரில் ஆடிட்டர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை திருட்டு

Published On 2019-12-23 09:35 GMT   |   Update On 2019-12-23 09:35 GMT
புதுவை ரெயின்போ நகரில் ஆடிட்டர் வீட்டில் இருந்து ரூ.3½ லட்சம் மதிப்பிலான நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை ரெயின்போநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கஜபதி ஆடிட்டராக உள்ளார். இவரது மனைவி கவிதா (வயது41). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் காலாப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்களது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் திருக்கனுரை சேர்ந்த தேவி என்ற பெண் வீட்டு வேலைக்கு சேர்ந்தார். ஆனால் 20 நாளில் சம்பளம் கூட வாங்காமல் தேவி வேலையை விட்டு நின்று விட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்து செல்வதற்காக கவிதா படுக்கை அறையில் கட்டிலின் கீழே வைத்திருந்த நகையை பார்த்தார். அப்போது அந்த நகையில் 4½ பவுன் நெக்லஸ், 4 பவுன் செயின் மற்றும் 4½ பவுன் தங்க காசுகள் என 13 பவுன் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு திடுக்கிட்டார். யாரோ அந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3½ லட்சமாகும்.

இதுகுறித்து கவிதா பெரியகடை போலீசில் புகார் செய்தார். புகாரில் நகைகளை வீட்டு வேலை செய்து வந்த தேவி திருடி சென்று இருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறினார். இதுகுறித்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News