செய்திகள்
வண்டலூர் பூங்கா

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா திறந்திருக்கும்

Published On 2019-12-21 10:47 GMT   |   Update On 2019-12-21 10:47 GMT
வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களில் திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:

சென்னையை அடுத்த வண்டலூரில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை வார விடுமுறை நாளாகும். ஆனால், வார விடுமுறையில் முக்கிய பண்டிகை தினங்கள் வரும் நிலையில் பூங்கா திறக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு டிச.24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை திறந்திருக்கும்.

இதேபோல், பொங்கல் விடுமுறையான ஜனவரி 14-ம் தேதி செவ்வாய்க்கிழமையிலும் வண்டலூர் மற்றும் கிண்டி உயிரியல் பூங்கா இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News