செய்திகள்
வைகை அணையில் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்
வைகை அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதால் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 70 அடியை தொட்டது. இதனால் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய பாசனத்திற்காக முறைநீர் பாசனம் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று வரை 1105 கன அடி நீர் வந்தது. இன்று காலை 869 கன அடி நீரே வந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் 66.54 அடியாக குறைந்துள்ளது.
இதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை 2090 கனஅடி நீர்திறக்கப்பட்டது. இன்று காலை மதுரை குடிநீருக்காக மட்டும் 60 கன அடி நீர் திறக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.10 அடியாக உள்ளது. 601 கன அடி நீர் வருகிறது. 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.50 அடியாக உள்ளது. 57 கன அடி நீர் வருகிறது. 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடி. 42 கன அடி நீர் வருகிற நிலையில் 27 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
தேக்கடி 1.2, உத்தமபாளையம் 1.2, மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 70 அடியை தொட்டது. இதனால் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய பாசனத்திற்காக முறைநீர் பாசனம் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று வரை 1105 கன அடி நீர் வந்தது. இன்று காலை 869 கன அடி நீரே வந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் 66.54 அடியாக குறைந்துள்ளது.
இதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை 2090 கனஅடி நீர்திறக்கப்பட்டது. இன்று காலை மதுரை குடிநீருக்காக மட்டும் 60 கன அடி நீர் திறக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.10 அடியாக உள்ளது. 601 கன அடி நீர் வருகிறது. 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.50 அடியாக உள்ளது. 57 கன அடி நீர் வருகிறது. 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடி. 42 கன அடி நீர் வருகிற நிலையில் 27 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
தேக்கடி 1.2, உத்தமபாளையம் 1.2, மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.