செய்திகள்
சீமான்

போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது- ரஜினிக்கு சீமான் பதிலடி

Published On 2019-12-20 03:22 GMT   |   Update On 2019-12-20 03:22 GMT
போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது என நடிகர் ரஜினிக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடெங்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தீவிரமாக போராடிவருகின்றனர். ஒரு சில பகுதிகளில் போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே போராட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த்  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது’ என கூறியுள்ளார்.



ரஜினியின் இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டுவிட்டரில் தனது எதிர் கருத்தை தெரிவித்துள்ளார் அதில் கூறியிருப்பதாவது:-

பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!

அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது!

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
Tags:    

Similar News