செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
திருச்சி அரியமங்கலத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவெறும்பூர்:
திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பாரதியார் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த தச்சு தொழிலாளி சங்கர் (வயது 30) என்பவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையறிந்த சிறுமியின் தாய் கவிதா அதிர்ச்சியடைந்ததுடன், அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சங்கர் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.