செய்திகள்
கோப்பு படம்

அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் - 2 பேர் கைது

Published On 2019-12-18 09:18 GMT   |   Update On 2019-12-18 09:18 GMT
அசோக் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் சிவகுமார் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா தலைமையில் போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வாலிபர்கள் வீட்டிற்குள் சென்று வந்தனர். இதையடுத்து அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து சோதனை செய்தனர்.

அங்குள்ள அறையில் அழகிகள் 2பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்த விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த செல்வநாதன் ஆகியோரை கைது செய்தனர். 2 அழகிகள் மீட்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த 6 மாதங்களாக அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து பெங்களூரில் இருந்து வாரத்திற்கு 2 அழகிகளை வரவழைத்து உள்ளனர்.

வாடிக்கையாளர்கள் செல்போனுக்கு அழகிகளின் படங்களை அனுப்பிவைத்து நூதன முறையில் விபசாரம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட அழகிகள் இருவரும் மயிலாப்பூர் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News