செய்திகள்
திமுக தலைமை அலுவலகம்

உள்ளாட்சி தேர்தல்- உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக

Published On 2019-12-17 05:53 GMT   |   Update On 2019-12-17 05:53 GMT
உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. ஆனால், இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படாததால் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்தவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. 

அதன்பின்னர் தேர்தல் பணி விறுவிறுப்படைந்தது. வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. 



இதற்கிடையே, திமுக சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இன்று மேலும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஏற்கனவே டிசம்பர் 11  மற்றும் 12  ஆகிய தேதிகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை செயலாளருக்கு எதிராக இந்த வழக்கை திமுக தொடர்ந்துள்ளது. 
Tags:    

Similar News