செய்திகள்
தற்கொலை

வில்லியனூர் அருகே தனியார் நிறுவன காவலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-12-13 12:16 GMT   |   Update On 2019-12-13 12:16 GMT
வில்லியனூர் அருகே தனியார் நிறுவன காவலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் நாகஜோதி (வயது 33). இவர் கடந்த சில ஆண்டுகளாக வில்லியனூர் அருகே ராமநாதபுரத்தில் தங்கி தொண்டமாநத்தத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நாகஜோதி தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு காவலாளியிடம் பத்துகண்ணு பகுதியில் எலி மருந்து (வி‌ஷம்) தின்று விட்டதாக செல்போனில் தகவல் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு மயங்கி கிடந்த நாகஜோதியை மீட்டு ராமநாதபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று நாக ஜோதி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து நாகஜோதி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News