செய்திகள்
கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை முதியவர் போக்சோவில் கைது

Published On 2019-12-13 11:13 GMT   |   Update On 2019-12-13 11:13 GMT
கோவையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோவை:

கோவையை சேர்ந்த 13 வயது மாணவி மாநகராட்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் பள்ளி செல்லும் போது ரங்கே கவுடர் வீதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜூ (60) என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பள்ளி ஆசிரியையிடம் கூறினார். அவர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பெற்றோர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் ராஜூவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News