செய்திகள்
பெண் மரணம்

திருச்சுழி அருகே வயலுக்குச் சென்ற பெண் மர்ம மரணம்

Published On 2019-12-13 10:48 GMT   |   Update On 2019-12-13 10:48 GMT
திருச்சுழி அருகே வயலுக்குச் சென்ற பெண் மர்மமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள ராணி சேதுபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சத்யபாமா (வயது 50). இவர் நேற்று காலை அந்தப்பகுதியில் உள்ள தனது வயலுக்குச் சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பில்லை.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சத்யபாமாவை தேடினர். பலனில்லை. இன்று காலையும் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வயலுக்குள் சத்யபாமா மர்மமாக இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.

சத்யபாமாவின் மர்மச்சாவு குறித்து பரளச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சத்யபாமா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சத்யபாமாவின் மர்மச்சாவு குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News