செய்திகள்
தஞ்சை அருகே காது குத்தும் தொழிலாளி கொலை- வாலிபர் கைது
காது குத்தும் தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே மாரியம்மன் கோவிலை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 80). இவர் மாரியம்மன் கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் காதுக்குத்தும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று (12-ந் தேதி) இரவு 7 மணிக்கு குளத்திற்கு குளிக்கச் சென்றார். அப்போது அவரின் பின்னால் வந்த வாலிபர் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த கோவிந்த ராஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜன் இறந்தார்.
இதுபற்றி தகவறிந்த தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரியம்மன் கோவில் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த அஜித் (21) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.