செய்திகள்
தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே மின் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2019-12-12 16:31 GMT   |   Update On 2019-12-12 16:31 GMT
தேன்கனிக்கோட்டை அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த மின் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 56). இவர் மின்சார வாரிய ஊழியராக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவருக்கு வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராமகிருஷ்ணன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News