செய்திகள்
செயின் பறிப்பு

செய்யாறு அருகே தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியையிடம் 5 பவுன் செயின் பறிப்பு

Published On 2019-12-12 14:45 GMT   |   Update On 2019-12-12 14:45 GMT
செய்யாறு அருகே தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை மீது பைக்கால் மோதி 5 பவுன் நகையை வாலிபர் பறித்து சென்றார்.

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி தேன்மொழி (வயது 48). இவர் பையூர் அரசு நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

தற்போது மேல்குளத்தூர் ஊராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேன்மொழி இன்று காலை தேர்தல் பணிக்காக பைக்கில் மேல்குளத்தூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். செங்காடு என்ற இடத்தில் சென்றபோது வாலிபர் ஒருவர் பைக்கில் எதிரே வந்த தேன்மொழி பைக் மீது மோதினார்.

இதில் நிலை தடுமாறி தேன்மொழி கீழே விழுந்தர். அப்போது வாலிபர் தேன்மொழி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்தார். இதில் திடுக்கிட்ட தேன்மொழி அலறி கூச்சலிட்டார். அதற்குள் வாலிபர் தப்பி சென்றார்.

இது குறித்து அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News