செய்திகள்
கைது

மதுரையில் இளம்பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த 2 பேர் கைது

Published On 2019-12-12 13:38 GMT   |   Update On 2019-12-12 13:38 GMT
ஒத்தக்கடை அருகே இளம்பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

ஒத்தக்கடையை அடுத்த செம்பியனேந்தல் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகள் சுருதிபிரியா (வயது 23). இவர் நேற்றிரவு அந்தப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது அவரை 2 பேர் வழிமறித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக சுருதி பிரியா ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் இதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன் மகன் பூமிவேல் (20), தங்கம் மகன் அஜித் (20) என்பது தெரியவந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

இதை அடுத்து சுருதி பிரியாவிடம் 3 பவுன் தங்கச்சங்கிலி திருடியதாக பூமிவேல், அஜித் ஆகிய 2 பேரையும் ஒத்தக்கடை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News