செய்திகள்
விபத்து

தா.பேட்டை அருகே கிரேன் மோதி தொழிலாளி பலி

Published On 2019-12-11 14:05 GMT   |   Update On 2019-12-11 14:05 GMT
தா.பேட்டை அருகே ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி மீது கிரேன் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தா.பேட்டை:

தா.பேட்டை அடுத்த ஜெம்புநாதபுரம் கிராமத்தில் தனியார் இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது. இங்கு முசிறியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது49) என்பவர் வேலை செய்து வந்தார். ஆலையில் வேலை செய்து செய்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த கிரேன் இவர் மீது மோதியது. 

இதில் பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார், உடனே அவரை சிகிச்சைக்காக முசிறியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பன்னீர் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 

இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News