செய்திகள்
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் முத்து (வயது 47). இவரது நண்பர் ராதாகிருஷ்ணன் (38).
இவர் அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய முத்து தனக்கு தெரிந்த 6 பேரிடம் பணம் பெற்று ரூ.63 லட்சத்தை கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட ராதாகிருஷ்ணன், வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் பணத்தை கேட்ட போது அதனையும் தர மறுத்தார்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாளிடம் புகார் மனுவை முத்து கொடுத்தார். நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு பெருமாள் உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் முத்து (வயது 47). இவரது நண்பர் ராதாகிருஷ்ணன் (38).
இவர் அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய முத்து தனக்கு தெரிந்த 6 பேரிடம் பணம் பெற்று ரூ.63 லட்சத்தை கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட ராதாகிருஷ்ணன், வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் பணத்தை கேட்ட போது அதனையும் தர மறுத்தார்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாளிடம் புகார் மனுவை முத்து கொடுத்தார். நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு பெருமாள் உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.