செய்திகள்
கோப்பு படம்

மதுவுக்கு ‘சைடிஸ்’ சாப்பிட்ட முதியவர் பலி

Published On 2019-12-11 09:00 GMT   |   Update On 2019-12-11 09:00 GMT
பாகூர் அருகே மதுவுக்கு சைடிஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:

கடலூர் திருப்பாதிரி புலியூர் போடி தெருவை சேர்ந்தவர் மணிபத்தர் (வயது 75). இவருக்கு மது பழக்கம் உண்டு.

தினமும் புதுவை கிருமாம்பாக்கம் அருகே உள்ள முள்ளோடை சாராய கடைக்கு வந்து மது குடிப்பார்.

அதேபோல் இன்று காலை சாராய கடைக்கு வந்தார். இவர், சாராயத்துடன் உளுந்த வடையை சைடிஸ் ஆக சாப்பிடுவது வழக்கம்.

இன்று மதுகடைக்கு வந்ததும் அருகில் உள்ள கடையில் உளுந்த வடை வாங்கினார். பின்னர் சாராயத்தை வாங்கிய அவர் உளுந்த வடையை கடித்து தின்றபடியே சாராயம் குடித்தார்.

அப்போது உளுந்த வடை தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு திணறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உதவினார்கள்.

ஆனாலும், உளுந்த வடை தொண்டையை விட்டு உள்ளேயும் செல்லவில்லை. வெளியேயும் வரவில்லை.

அப்போது அங்கு வந்த ரோந்து போலீசாரும் முயற்சி செய்து பார்த்தார்கள். அதற்குள் அவர் மயங்கி விழுந்தார்.

எனவே கிருமாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News