செய்திகள்
பொதுமக்கள் முற்றுகை

வத்தலக்குண்டுவில் சுகாதார கேடு- பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Published On 2019-12-10 11:28 GMT   |   Update On 2019-12-10 11:28 GMT
வத்தலக்குண்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு பேரூராட்சி பகுதி முழுவதும் சுகாதார கேடு நிலவுகிறது. பேரூராட்சி பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. விவேகானந்தா நகர் கோவிந்தசாமி தியேட்டர் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மேலும் அப்பகுதியில் சாக்கடைகள் தேங்கி கொசு புழுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது. 

இதனால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி சுகாதார ஆய்வாளர் செல்வி சித்ராமேரி மற்றும் பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிவிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து அதிகாரிகளின் மெத்தனபோக்கை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெர்மன்ராஜா தலைமையில் ஏராளமான பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட் டார்கள். இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News