செய்திகள்
தற்கொலை

கோவை அருகே தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2019-12-10 09:43 GMT   |   Update On 2019-12-10 09:43 GMT
கோவை அருகே தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கோவை:

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள பி.என்.புதூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் பிரியங்கா (வயது 24). பிசியோதெரபிஸ்ட்.

இவர் கடந்த 2 மாதங்களாக மன குழப்பத்துடன் காணப்பட்டார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரியங்கா வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் தூக்கு கயிற்றில் இருந்து அவரை இறக்கினர். பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரியங்காவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News