செய்திகள்
கைது

கும்பகோணம் அருகே வேனில் மணல் கடத்திய வாலிபர் கைது

Published On 2019-12-10 09:02 GMT   |   Update On 2019-12-10 09:02 GMT
கும்பகோணம் அருகே வேனில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் ஓடை வாய்க்கால் மதகு பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பந்தநல்லூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் வந்த வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து வேனில் வந்த வேட்டைமங்கலம் காந்திநகரை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவரை கைது செய்து வேனை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News