செய்திகள்
கைது

சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனை மறித்து தகராறு செய்த 2 பேர் கைது

Published On 2019-12-10 07:39 GMT   |   Update On 2019-12-10 07:39 GMT
சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனை மறித்து தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் வந்தநல்லூர் கீழவயலி கிராமத்தில் இருந்து மாணவ- மாணவிகள் ஒரு வேனில் தினமும் முறம்பு பகுதிக்கு சென்று படித்து வந்தனர். இந்த வேன் தினமும் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள சென்னிகுளம் வழியாகவே பள்ளிக்கு சென்று வருகிறது.

நேற்றும் வழக்கம் போல் பள்ளிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து கொண்டு சென்னிகுளம் பகுதியில் சென்ற போது அந்த ஊரை சேர்ந்த 3 வாலிபர்கள் வேனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். அந்த ஊரை சேர்ந்தவர்கள் அதனை கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து கேள்விபட்ட கீழ வயலியை சேர்ந்த முனீஸ்வரன் மகன் சாய்ராம் குமார் (20) வேனை எப்படி வழி மறிக்கலாம் என்று 3 பேரிடமும் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 வாலிபர்களும் சாய்ராம் குமாரை சரமாரியாக தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து சாய்ராம் குமார் கரிவலம் வந்தநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சென்னி குளத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன், ராமசாமி மகன் அருணாகரன், சுப்பையா மகன் கருத்தப் பாண்டி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் மணிகண்டன் மற்றும் கருத்தப்பாண்டியை போலீசார் இன்று கைது செய்தனர். அருணாகரன் தலைமறைவாக உள்ளார். 3 பேரும் டிப்ளமோ பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News