செய்திகள்
தற்கொலை

பல்லடம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2019-12-09 10:08 GMT   |   Update On 2019-12-09 10:08 GMT
பல்லடம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் 6-வது வீதியைச் சேர்ந்த ஷேக் தாவூத் மகன் செமிது ரகுமான் (வயது 22).

இவர் தனது தாய் தந்தை மற்றும் அண்ணன் ஆகியோருடன் அருள்புரம் பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த செமிது ரகுமான் தனி அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். பின்னர் மதிய உணவிற்காக தாயார் அவரை அழைத்தபோது கதவு திறக்கப்படவில்லை. நீண்ட நேரமாகியும் கதவை தட்டி திறக்காததால் ஜன்னல் சந்தேகம் அடைந்து வழியாக பார்த்தபோது செமிதுரகுமான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

உடனே கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பல்லடம் போலீசில் செமிது ரகுமானின் தாயார் அமீனாகுட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News