செய்திகள்
பெற்றோர் படிக்க வற்புறுத்தியதால் விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பெற்றோர் படிக்க வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
வாடிப்பட்டியை அடுத்த எர்ரம்பட்டியை சேர்ந்த கண்ணன் மகள் முத்து (வயது 18). இவர் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெறவில்லை. இதுபற்றி கண்ணன் கேட்டபோது, பிளஸ்-2 படிப்பு புதிய செலபஸ் என்பதால் படிக்க மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
இருந்தபோதிலும் பெற்றோர் படி, படி என்று அறிவுறுத்தி உள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்து சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த பேன் மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்து பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டியை அடுத்த எர்ரம்பட்டியை சேர்ந்த கண்ணன் மகள் முத்து (வயது 18). இவர் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெறவில்லை. இதுபற்றி கண்ணன் கேட்டபோது, பிளஸ்-2 படிப்பு புதிய செலபஸ் என்பதால் படிக்க மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
இருந்தபோதிலும் பெற்றோர் படி, படி என்று அறிவுறுத்தி உள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்து சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த பேன் மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்து பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.