செய்திகள்
விஷம்

தென்காசி லாட்ஜில் வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2019-12-09 05:42 GMT   |   Update On 2019-12-09 05:42 GMT
தென்காசி லாட்ஜில் கடன் தொல்லை காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள செந்தில் விளையை சேர்ந்தவர் ராபின் கிறிஸ்டோபர் (வயது42). இவருக்கு ஏராளமாக கடன் தொல்லை இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் வீட்டுக்கு தெரியாமல் அவர் தென்காசி வந்து லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அவரை காணாத அவரது மனைவி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த நிலையில் தென்காசி லாட்ஜில், ராபின் கிறிஸ்டோபர் தங்கி இருந்த அறை கதவு நேற்று நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதைத்தொடர்ந்து லாட்ஜ் ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர்.

அப்போது படுக்கையில் ராபின் கிறிஸ்டோபர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் தென்காசி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

குமரி மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News