செய்திகள்
மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி

பொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி

Published On 2019-12-07 13:48 GMT   |   Update On 2019-12-07 13:48 GMT
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசு வழங்க தடையில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுபற்றி மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறும்போது,

"உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசு வழங்க தடையில்லை.  புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் வாக்குப்பதிவு தவிர்க்கப்படுகிறது.

9 புதிய மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தொடரும். நகர்ப்புற பகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Tags:    

Similar News