செய்திகள்
கோப்பு படம்.

நாசரேத் அருகே கார் திருட்டு

Published On 2019-12-06 16:07 GMT   |   Update On 2019-12-06 16:07 GMT
நாசரேத் அருகே உள்ள டெத்தாணியநகரில் பெந்தேகோஸ்தே சபை செயல்பட்டு வருகிறது. சபை வளாகத்தில் நிறுத்தியிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியை அடுத்த டெத்தாணியநகரில் பெந்தேகோஸ்தே சபை செயல்பட்டு வருகிறது.  இந்த சபைக்கு சொந்தமாக கார் ஒன்று உள்ளது. இந்த காரானது எப்போதும் சபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும். கடந்த 30-ந்தேதி அன்றும் அங்கு காரை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் இரவு மர்ம நபர்கள் அங்கு புகுந்து காரை திருடி சென்றனர். 

இது குறித்து சபை பாஸ்டர் ஜஸ்டீன் தாஸ் நாசரேத் போலீசில் புகார் செய்தார்.  புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காரை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
Tags:    

Similar News