நாகர்கோவிலில் தொழிலாளியை கொல்ல முயற்சி- 2 பேர் கைது
நாகர்கோவில்:
திருவனந்தபுரம் விதுரா பகுதியை சேர்ந்தவர் சஜிமோன் (வயது 34) தொழிலாளி. இவர் நேற்று ராமன்புதூர் சந்திப்பில் பஸ்சுக்காக காத்து நின்றுகொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சஜிமோனிடம் குடிப்பதற்கு பணம் கேட்டனர். ஆனால் அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சஜிமோனை வெட்ட முயன்றனர். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் விலகினார். இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து கொலைமிரட்டல் விடுத்து அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் சஜிமோன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் சஜிமோனை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27), சுபாஷ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.