செய்திகள்
நாராயணசாமி

குட்கா போதை பொருட்களை கடைகளில் விற்கக்கூடாது: நாராயணசாமி எச்சரிக்கை

Published On 2019-12-04 11:34 GMT   |   Update On 2019-12-04 11:34 GMT
வியாபாரிகள் குட்கா போதை பொருட்களை கடைகளில் விற்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது புதுவை முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் குட்கா விற்பனை செய்து இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்குவதாக புகார் வந்துள்ளது.

கடைகளில் எக்காரணம் கொண்டும் எந்த விதமான குட்கா போன்ற போதை பொருளும் விற்பனை செய்யக்கூடாது.

குறிப்பாக பள்ளிக்கூட மாணவர்களிடமும், கல்லூரி மாணவர்களிடமும் குட்கா போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்து மாணவர்களின் எதிர்காலத்தை குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலத்தை வீணாக்குவது தொடர்பாக, புகார்கள் வருகின்றன. குட்கா வியாபாரம் செய்பவர்கள் போதை பொருள்களை பயன்படுத்துபவர்களின் எதிர்காலம் வீணாகி விடுகிறது என்பதை உணர்ந்து போதை பொருள்களை பயன்படுத்துபவர்கள் அந்த சிறு பிள்ளைகளும் தங்களுடைய பிள்ளைகளாகவும் இருக்கலாம் என்ற உணர்வுடன் மேற்கண்ட பொருள்களை விற்பனை செய்யக்கூடாது.

இது தொடர்பாக காரைக்காலில் குட்கா என்ற பெயரில் போதை பொருட்களை விற்பனை செய்வதும் புகையிலை என்ற பெயரில் குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு விற்பனை செய்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனவே வியாபாரிகள் அனைவரையும் நான் வேண்டிக்கேட்டுக்கொள்வது எக்காரணம் கொண்டும் எந்தவிதமான கஞ்சா போன்ற போதைப் பொருள்களையும் குட்கா பொருள் விற்பனையும் செய்யக்கூடாது என்று தெரிவித்துக்கொள்றேன்.

காவல்துறையினர் கடைகளில் சோதனை செய்து குட்கா விற்பனை செய்வது முழுவதும் தடை செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.

எனவே வியாபாரிகள் கடைகளில் குட்கா போதைப் பொருள் எதையும் விற்பனை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Tags:    

Similar News