செய்திகள்
கள்ளப்பெரம்பூர் அருகே மது விற்ற வாலிபர் கைது
கள்ளப்பெரம்பூர் அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள தென்னங்குடியில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் மோகன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற் கொண்டனர்.
அந்த பகுதியில் சிலர் மது பாட்டில்களை வாங்கி கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் தென்னங்குடி-தென்பெரம்பூர் சாலையில் சென்று கண்காணித்த போது அங்கு ஒருவர் மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் தென்னங்குடியை சேர்ந்த சேகர் (வயது48) என தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.