செய்திகள்
தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே பூச்சி மருந்தை குடித்து பெண் தற்கொலை

Published On 2019-12-03 10:01 GMT   |   Update On 2019-12-03 10:01 GMT
ஆண்டிப்பட்டி அருகே பூச்சிமருந்தை குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டியை சேர்ந்த சுப்பையா மனைவி லட்சுமி (வயது65). இவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருந்து வந்தன. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் சம்பவத்தன்று பூச்சி மருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஒட்டணை பகுதியை சேர்ந்த பாண்டியன் மனைவி காமாட்சி (26). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். காமாட்சி சம்பவத்தன்று தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்தார். அப்போது அவரது பின் தலையில் அடிபட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

Similar News