செய்திகள்
விபத்து

கயத்தாறு அருகே ஆம்னி பஸ் மோதி முதியவர் பலி

Published On 2019-12-02 11:36 GMT   |   Update On 2019-12-02 11:36 GMT
கயத்தாறு அருகே ஆம்னி பஸ் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள சன்னது புதுக்குடியை சேர்ந்தவர் சண்முகம் (வயது70). இவர் கயத்தாறு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த ஆம்னி பேருந்து ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. மேலும் பேருந்தின் டயர் ஏறி இறங்கியதில் அவரது தலை நசுங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆம்னி பேருந்து டிரைவரான பாளை வாகைக்குளத்தை சேர்ந்த பரமசிவன் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News