செய்திகள்
87-வது பிறந்தநாள்: கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
அவர், சமூக நீதியின் சமரசமற்ற காவலர்; தமிழினத்தின் தகுதி செறிந்த பாதுகாப்பு அரண். அவரது சிந்தனையும் சொல்லும் செயலும்; உலகத்தமிழ் மானுடத்துக்கு மேலும் பல்லாண்டு தொடர வேண்டும். தந்தை பெரியார் உலகம் பயனுற வேண்டும் என்று, அவர் பிறந்தநாளாம் இன்று வணங்கி, வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பத்து வயதில், திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தராக, அறிவொளியினால் ஆர்வம் மிகக் கொண்டு, மேடையில் முழங்கத் தொடங்கி, 87 வயதிலும் சுறுசுறுப்பான சுயமரியாதை இளைஞராய், இன-மொழி எழுச்சியூட்ட, நாள்தோறும் வலம் வருகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.