செய்திகள்
தண்ணீரில் மூழ்கி பலி

சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் மரணம்

Published On 2019-12-01 13:32 GMT   |   Update On 2019-12-01 13:32 GMT
சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் குளித்த 10ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

சோழவந்தான்:

திருமங்கலத்தை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகன் யோகநாதன் (வயது 15). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்ற யோகநாதன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் யோகநாதனை உறவினர்களின் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடினர். பலன் இல்லை.

இந்த நிலையில் இன்று காலை சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை ஆற்று பாலத்தின் கீழ் சிறுவன் பிணம் மிதப்பதாக சோழவந்தான், காடுபட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, வாண்டையார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் உடலை மீட்டனர்.

விசாரணையில் அந்த சிறுவன் கடந்த வியாழக்கிழமை மாயமான யோகநாதன் என்பது தெரியவந்தது. அவனது உடல் பிரேத பிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பள்ளிக்கு சென்ற மாணவன் வைகை ஆற்றில் குளித்தபோது ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Tags:    

Similar News