செய்திகள்
ஆவணங்களை ஒப்படைக்கும் விவகாரம் - தமிழக அரசுக்கு பொன் மாணிக்கவேல் கடிதம்
சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கும் விவகாரம் குறித்து சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கோவில் சிலைகளை மீட்பதற்காக பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக அவருக்கு பணி நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இன்று அவரது பணிக்காலம் நிறைவு பெறுகிறது. இதையொட்டி தமிழக அரசு அவருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அந்த அரசாணையில், “சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கும் விவகாரம் குறித்து சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்டதால் அரசு ஆணை தனக்கு பொருந்தாது என குறிப்பிட்டுள்ளார்.